crossorigin="anonymous">
விளையாட்டு

கிரிக்கட் சம்பியனாக கிண்ணியா பிரதேச செயலக அணி தெரிவு

2021 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கற் சுற்றுப்போட்டித் தொடரின் சம்பியனாக கிண்ணியா பிரதேச செயலக அணி தெரிவு செய்யப்பட்டது.

திருகோணமலை (ஏகாம்பரம்) மைதானத்தில் இன்று (20) நடைபெற்ற இறுதிப்போட்டியில் கிண்ணியா பிரதேச செயலக அணி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக அணியை வீழ்த்தி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெற்ற இத்தொடரில் 12 அணிகள் கலந்து சிறப்பித்தன.

13 வது தடவையாக நடைபெற்ற அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கற் சுற்றுத் தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக கிண்ணியா பிரதேச செயலக அணியின் எம் .எப்.எம் . அஸ்மியும் , இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக அதே அணியின் ஏ.எச்.இஸ்மத்தும் அதேபோன்று தொடர் நாயகனாக எம்.ஏ.எம்.அம்மாறும் தெரிவுசெய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள வழங்கி வைத்தார்.

அடுத்த வருடம் 14வது மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான போட்டியை நடாத்த கோமரங்கடவல பிரதேச செயலக அணி தெரிவு செய்யப்பட்டதுடன் அதற்கான நினைவு சின்னத்தை மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது கோமரங்கடவெல பிரதேச செயலாளர் எஸ் .எம் .சி .சமரகோனிடம் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் ,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பி.ஆர். ஜயரத்ன, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் ,பிரதேச செயலகங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 82 − = 79

Back to top button
error: