crossorigin="anonymous">
உள்நாடுபொது

“சவால்களுக்கு மத்தியில் சுபீட்சத்தின் ஈராண்டு” தலைப்பிலான நூலின் மும்மொழி பதிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஈராண்டுப் பதவிக் காலத்தையிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு தயாரித்த, “சவால்களுக்கு மத்தியில் சுபீட்சத்தின் ஈராண்டு” தலைப்பிலான நூலின் மும்மொழிப் பதிப்புகள், விசேட தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இருவட்டு மற்றும் ‘Signature of THE EXECUTIVE’ சஞ்சிகையின் முதல் பிரதி ஆகியன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டிஆரச்சி அவர்கள் கையளித்தார்.

அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் நேற்று (19) இடம்பெற்ற இந்நிகழ்வில்,
ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க உள்ளிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிக்குழாம் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 5 = 12

Back to top button
error: