crossorigin="anonymous">
வெளிநாடு

ஓமன் அரசு சுமார் 24 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்கு தடை

ஓமன் அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் 24 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

இது குறித்து ஓமன் அரசு வெளியிட்ட அறிவிப்பு – “கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு சுமார் 24 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுகிறது மறு அறிவிப்பு வரை இந்தத் தடை தொடரும்.

பயணிகள் விமானம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் விபரம்

பிரிட்டன், துனிசியா, லெபனான், ஈரான், இராக், லிபியா, புருனே, சிங்கப்பூர், இந்தோனேசியா, கினியா, கொலம்பியா, எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், சூடான், தான்சானியா, தென் ஆப்பிரிக்கா, கானா, நைஜீரியா, கொலம்பியா, அர்ஜெண்டினா, சியரா லியோன், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்”.இவ்வாறு ஓமன் அரசு தெரிவித்துள்ளது.

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 1,675 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,80,235 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,356 பேர் பலியாகி உள்ளனர்.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: