crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடியில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முழுமையாக விடுவிப்பு

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதில் காத்தான்குடி 4ம் குறிச்சி, காத்தான்குடி 5ம் குறிச்சி தெற்கு, காத்தான்குடி 5 தெற்கு, புதிய காத்தான்குடி கிழக்கு, காத்தான்குடி 6 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டதுடன் வழமையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
காத்தான்குடியில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அதிகளவிலானோர் கொவிட்19 தொற்றாளர்களாக இனங்கானப்பட்டதனைத் தொடர்ந்து காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 54 − = 45

Back to top button
error: