crossorigin="anonymous">
வெளிநாடு

மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் போட்டி சவூதி அரேபியாவில்

117 நாடுகளைச் சேர்ந்த 166 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்

மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் போட்டி மக்கா அல் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் இன்று (25) ஆரம்பமாகிறது.

சவூதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் வழிகாட்டலின் கீழ் சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சு போட்டியை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளது

ஐந்து பிரிவுகளாக நடைபெறவுள்ள மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் போட்டியில் சுமார் 117 நாடுகளைச் சேர்ந்த 166 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்தும் ஒரு போட்டியாளர் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

நான்கு மில்லியன் ரியால் பரிசுத்தொகையில் முதல் பிரிவான 30 ஜுஸ்உக்கள் மனனப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டவருக்கு 5 இலட்சம் ரியால்கள் பரிசாக வழங்கப்பட வுள்ளன. கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசில்களும், சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 5

Back to top button
error: