crossorigin="anonymous">
விளையாட்டு

வட மாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டி

வட மாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டி நேற்று (22) காலை 7.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து குமுழமுனை மகாவித்தியாலய முன்றலில் நிறைவடைந்தது.

வட மாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டியில் பாடசாலையின் 200 மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றியுள்ளனர்.

மரதனோட்ட நிறைவு நிகழ்வு குமுழமுனை மகாவித்தியாலய நிகழ்வு மண்டபத்தில் இடம்பெற்றது, இதில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கு கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் முல்லை வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர், நிர்வாகப் பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 92 − = 90

Back to top button
error: