crossorigin="anonymous">
பிராந்தியம்

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மூச்சு செயற்றிட்டத்தின் கீழ் 39 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்யதியசாலையின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்றது.

வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி.க.கலாறஞ்சினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா பிரதம அதிதியாக கலந்துகொண்டு இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரத்தை வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி, மற்றும் வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 44 = 49

Back to top button
error: