crossorigin="anonymous">
பிராந்தியம்

அக்குறணையில் போதைப்பொருள் விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஆரம்பம்

கண்டி – அக்குறணை ஜமியத்துல் உலாமா மற்றும் கலாச்சாரக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்குறணை பிரதேச சபை, மஸ்ஜித்கள் சம்மேளனத்துடன் இணைந்து, பிராந்தியத்திற்குள் வாராவாரம் ஜும்மா தொழுகையை தொடர்ந்து ஒவ்வொரு ஜும்மா பள்ளிவாயல்களிளும் போதைப்பொருள் விழிப்புணர்வு வேலை திட்டத்தின் முதல் நிகழ்ச்சித் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (23) புலுகொஹொதென்னை அஹ்ஸன் ஜும்மா பள்ளியில் ஜும்மா தொழுகையை தொடர்ந்து அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தலைமையில் நடைபெற்றது

அக்குறணை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் கலாச்சார குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்குறணை பிரதேச சபை, மஸ்ஜிதுகள் சம்மேலனத்துடன் இணைந்து பிரதேசத்தில் அமைந்திருக்கும் சகல பள்ளிவாயல்களிலும் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்வுகளை எதிர்வரும் வாரங்களில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

தரமான, நீண்ட கால அனுபவம் கொண்ட வளவாளர்களைக் கொண்டு போதைப் பொருள் விழிப்புணர்வு வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

“போதைப்பொருளற்ற எதிர்காலம் உருவாவது எமது கைகளில்தான் தங்கி இருக்கின்றது” என்றும் இந்த நிகழ்வில் ஊர் மக்கள் உள்ளிட்ட நலன்விரும்பிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுப்பதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 46 + = 52

Back to top button
error: