crossorigin="anonymous">
பிராந்தியம்

சாய்ந்தமருதில் வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வர்த்தக சந்தையானது, நாளை (30) புதன்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை சாய்ந்தமருது வொலிவேரியின் பல்தேவைக் கட்டிட வளாகத்தில் நடைபெறவுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் உள்ள தொழில் முயற்சியாளர்களினது வியாபாரத்தினை முன்னேற்றவும், பிரபல்யம் அடையச் செய்யும் வகையிலும் பல நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வர்த்தக சந்தையில் சாய்ந்தமருது தொழில் முயற்சியாளர்களது பொருட்களின் விற்பனையும் கண்காட்சியும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில், தொழில் முயற்சியாளர்களது முன்னேற்றத்திற்கு பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்து, பங்களிப்புச் செய்ய முடியும் என்பதால் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைத்து பொதுமக்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 + = 60

Back to top button
error: