crossorigin="anonymous">
விளையாட்டு

‘2022 FIFA World Cup’ உலகக் கிண்ண கால்பந்து போட்டி கத்தாரில்

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2022 FIFA World Cup கத்தார் நாட்டில் நாளை மறுதினம் (20) ஆரம்பமாவதுடன் போட்டி டிசம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கத்தார் நாட்டு அரசு செய்துள்ளது.முதல் போட்டியில் கட்டார் மற்றும் ஈக்வடோர் அணிகள் மோதவுள்ளன. ஆரம்ப நிகழ்ச்சி மற்றும் முதல் போட்டி அல் பைத் அரங்கில் நடைபெறும்.

உலக கிண்ண போட்டியில் விளையாடுவதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் கத்தார் நாட்டுக்கு வருகை தந்துக்கொண்டிருக்கின்றன

அமெரிக்கா, ஜப்பான், அர்ஜென்டினா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே கத்தார் சென்று விட்டன. இந்த நிலையில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் தோகா சென்றடைந்தன.

வீரர்களுக்கு கத்தாரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டு அணியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டல்களுக்கு சென்று பிறகு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 59 + = 69

Back to top button
error: