crossorigin="anonymous">
விளையாட்டு

T20 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது

இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணி மோதின

T20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய (13) இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ரி20 உலக கோப்பையை வென்றுள்ளது.

ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலககோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ரி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முஹம்மத் ரிஸ்வான், பாபர் அசாம் இணை தொடக்கம் கொடுத்தது.

முதலில் பெட் செய்த பாகிஸ்தான் 137 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து வெற்றி பெற 138 ரன் இலக்கு நிர்ணயித்தது.

இரண்டாவதாக பெட்டிங் தொடங்கிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தாலும், சமாளித்து விளையாடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றியைப் பெற்றது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: