crossorigin="anonymous">
பிராந்தியம்

“PRIYM” இளைஞர் குழு அறிமுகமும் பெயர் சூட்டும் நிகழ்வும்

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சேவையாற்றக்கூடிய மாவட்ட ரீதியிலான இளைஞர் குழுவொன்றினை உருவாக்கி குறித்த குழுவினை சமூகத்திற்கு அறிமுகம் செய்து, அக்குழுவிற்கான பெயர் சூட்டும் நிகழ்வு நேற்று (12) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் தலைவர் பூபாலப்பிள்ளை கஜதீபன், செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் போசகர் க.பிரதீபன், அருவி பெண்கள் வலையமைப்பின் பிரதி இணைப்பாளர் தர்சினி ஸ்ரீகாந்த், அருவி பெண்கள் வலையமைப்பின் இரண்டாம் கட்ட “அக்கா” செயற்குழு உறுப்பினர்கள்
உள்ளிட்ட மேலும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பானது கடந்த மூன்று வருடங்களாக மேற்கொண்ட பாரிய முயற்சியின் பயனாகவே சிறந்த ஆளுமை திறன்மிக்க மட்டக்களப்பு மாவட்ட சமூகத்திற்கு சேவையாற்றக்கூடிய 100 இளைஞர்கள் இனங்காணப்பட்டு சமூகத்திற்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: