crossorigin="anonymous">
விளையாட்டு

புத்தளம் ‘City Galaxy premier league-2022’ கிரிக்கெட் சுற்றுப் போட்டித் தொடர்

கிரிக்கெட் சுற்றுப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நாளை

புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நேற்று (04) ‘City galaxy கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘City Galaxy premier league-2022’ கிரிக்கெட் சுற்றுப் போட்டித் தொடர் ஆரம்பமாகியது.

புத்தளம்நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு போட்டித் தொடரை ஆரம்பித்து வைத்தார். நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் அவர்களும் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.

எட்டு ஓவர்களைக் கொண்ட போட்டித் தொடரில் ஏழு அணிகள் மோதுகின்றன.
போட்டித் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூபா 40.000/- பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும்

இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு ரூபா 30.000/- பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்படவுள்ளதோடு போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரர் மற்றும் இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

‘City Galaxy premier league-2022’ கிரிக்கெட் சுற்றுப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நாளை வெள்ளிக்கிழமை (06) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 9 = 1

Back to top button
error: