crossorigin="anonymous">
உள்நாடுபொது

ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவு

ரஞ்சித் சியம்பலாபிட்டிய - 148 | இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் - 65 வாக்குகள்

இலங்கை பாராளுமன்றத்தில் வெற்றிடமான பிரதி சபாநாயகர் பதவிக்காக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதுடன் அதன் பின்னர் இன்று (05) இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தில் வெற்றிடமான பிரதி சபாநாயகர் பதவிக்காக பாராளுமன்றத்தில் இன்று இரகசிய வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இரகசிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளையும் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் 65 வாக்குகளையும் பெற்றிருந்ததோடு, 3 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ரஞ்சித் சியம்பலாபிட்டிய 83 மேலதிக வாக்குகளால் பிரதி சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 4 =

Back to top button
error: