crossorigin="anonymous">
விளையாட்டு

பெட்மின்டன் வீரர் நிலூக்க டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்ற தகுதி

இலங்கையில் சிறந்த பெட்மின்டன் வீரர் நிலூக்க கருணாரத்ன டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை அவர் பெறுவது இது மூன்றாவது முறையாகும். நிலூக்க கருணாரத்ன இதற்கு முன்னர் 2012 லண்டன் ஒலிம்பிக் மற்றும் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக்கொண்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் பெட்மின்டன் போட்டியின் அரையிறுதிக்கு நிலூக்க கருணாரத்ன தகுதி பெற்றமை, ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கை வீரரான நிலூக்கவின் மிக சிறந்த செயற்பாடாகும்.

இவர் 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் இலங்கை ஒலிம்பிக் அணியின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 28 − 22 =

Back to top button
error: