crossorigin="anonymous">
உள்நாடுபொது

மட்டக்களப்பு – கொழும்பு “புலதுசி ” அதிவேக புகையிரத சேவை

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை – கொழும்பு கோட்டைக்கு இடையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட “புலதுசி ” அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையானது போக்குவரத்து அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி அவர்களின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் 28.01.2022 திகதி முதல் மட்டக்களப்பு – கொழும்பு சேவையாக விஸ்தரிக்கப்படவுள்ளது.

இப்புகையிரத சேவையானது மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். மீண்டும் பிற்பகல் 15.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதமானது இரவு 21.52 க்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்புகையிரத சேவையினை ஏற்படுத்திக்கொடுத்த போக்குவரத்து அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி அவர்களுக்கு மட்டக்களப்ப மாவட்ட மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 + = 44

Back to top button
error: