crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊற்றுப்புலம் பிரதேச நாவலர் பண்ணை – வள்ளுவர் பண்ணை இணைக்கும் வீதி பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழைகாரணமாக கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழான ஊற்றுப்புலம் பிரதேசத்தின் நாவலர் பண்ணையையும் வள்ளுவர் பண்ணையையும் இணைக்கும் பிரதான வீதி பாதிப்படைந்துள்ளது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்று புலம் பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன. தற்போது பெய்து வருகின்ற கன மழை காரணமாக ஊற்றுப்புலம் வள்ளுவர் பண்ணையையும், நாவலர் பண்ணையையும் இணைக்கும் பிரதான வீதியின் பாலத்தின் பணிகள் முடிவுறா நிலையமையில் மக்களின் போக்குவரத்துக்காக தற்காலிக வீதி பயன்படுத்தப்பட்டு வந்தது.

கன மழை காரணமாக அவ்வீதி துண்டாடும் நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக 90 குடும்பங்களின் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழ்நிலையில் விரைந்து நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந் நிலைமையினை நேரடியாக பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் உரிய நடவடிக்கையினை துரிதமாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 87 − = 82

Back to top button
error: