crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

காரைதீவு பிரதேச வீதிகளில் ஊரடங்கை மீறி நடமாடிய மூவருக்கு கொவிட்19 தொற்று

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக‌ பிரிவில் சனிக்கிழமை (11) ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 17 பேருக்கு மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அடிப்படையில் மூவருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்போது 20 பி.சி.ஆர். மாதிரிகளும் எடுக்கப்பட்டதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீரின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், பாதுகாப்பு படையினர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர், இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு அண்டிஜென் பரிசோதனையின்போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

மக்கள் அத்தியவசிய தேவையை தவிர வீணாக வெளியில் வர வேண்டாம் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 6 = 10

Back to top button
error: