crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கும் சதோச விற்பனை நிலையம்

“மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சதோச விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் முன்மொழிவுகளை அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களிடம் முன் வைத்துள்ளேன்” என இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சதோச விற்பனை நிலையங்களின் ஊடாக மக்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடைமுறைகள் தொடர்பில் கண்டறிவதற்கான களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் இக்கட்டான சூழ்நிலையிலும் அரசாங்கத்தின் தலையீட்டினால் அனைத்து சதோச விற்பனை நிலையங்களும் திறக்கப்பட்டு அத்தியாவசிய பொருற்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.” எனவும் தெரிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 11 − = 1

Back to top button
error: