crossorigin="anonymous">
விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது பற்றி ஆராய்வு

பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது பற்றி ஆராய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று கூடவுள்ளதுடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் சுற்று தொடரில் பங்கேற்கும் 6 அணிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ளனர்

பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டிகளை நடத்துவதற்கு அபுதாபி அரசாங்கம் அங்கீகாரம் அளித்து இருக்கின்ற நிலையில் இதனை நடத்துவது தொடர்பான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கு என இந்த குழுவினர் கூட இருக்கிறார்கள்

சுற்றுத் தொடரில் பங்கேற்கும் சகல வீரர்களும் கொரோனா தடுப்பூசியை ஏற்றி இருப்பது அவசியம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது. இதுவரை தடுப்பூசி ஏற்றுக்கொள்ளாத வீரர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 50 + = 56

Back to top button
error: