crossorigin="anonymous">
விளையாட்டு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கராத்தே பயிற்சிப்பட்டறை

முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகளுக்கு JKS கராத்தே கழகத்தினால் கராத்தே பயிற்சியுடனான தரப்படுத்தல் மற்றும் பட்டி வழங்கும் நிகழ்வு நேற்று (25) ஞாயிற்றுக் கிழமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டுப் பிரிவினர் ஆதரவுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் தேசின்தன் ஆசிரியரால் பயிற்சி வழங்கிய மாணவர்களுக்கு பிரதம பொறியியளாளரும் கழகத்தின் தலைமை ஆசிரியர் ரோசி ஹரிந் அவர்களால் தரங்கனித்து தர சான்றிதழ் பட்டிகளுடனான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லை நகர கள்ளப்பாடு், உணாப்பிலவு, செல்வபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள், சிறார்கள், பாடசாலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் குறித்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஜேசுறெஜினொட், பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி வசிகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 39 = 48

Back to top button
error: