crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பலி

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நரிப்புல் தோட்டம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நரிப்புல் தோட்டம் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இன்று (05) இவ்வாறு ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இன்று நண்பகல் வேளையில் தனது வீட்டிற்கு அருகாமையிலுள்ள நரிப்புல் தோட்ட ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றபோதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை மீன் பிடிக்கச் சென்ற குறித்த இளைஞனுக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும், வலிப்பு நோய் ஏற்பட்டதன் விளைவாக இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆயித்தியமலை பொலிசார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 25 − = 15

Back to top button
error: