crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலையில் ஒட்சிசன் சிலிண்டர் மற்றும் ஒட்சிசன் ரெகுலேட்டர் அன்பளிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் அகம் மனிதாபிமான அவள் நிலையத்தால் கொவிட்19 இடைத்தங்கல் வைத்திய நிலையமாக செயற்படும் வைத்தியசாலைகளுக்கு அவசியமான ஒட்சிசன் சிலிண்டர் மற்றும் ஒட்சிசன் ரெகுலேட்டர் வழங்கும் நிகழ்வு இன்று (05) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உரிய பொருட்கள் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரளாவிடம் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.லவகுசராணாவினால் கையளிக்கப்பட்டதுடன்
குறித்த உபகரணங்களை அரசாங்க அதிபர் திருகோணமலை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வி.பிரேமானந்திடம் கையளித்தார்.

30 ஒட்சிசன் சிலின்டர்கள் மற்றும் 25 ஒட்சிசன் ரெகுலேட்டர்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் மொத்த பெறுமதி 21,25000 ரூபாவாகும். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 9 சிகிச்சை மத்திய நிலையங்களுக்கும் இவை வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சமன் ஜே.எஸ்.அருள்ராஜ் உட்பட வைத்தியசாலை பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 14 = 21

Back to top button
error: