crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு வயற் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயரிழப்பு

மட்டக்களப்பு – கரடியனாறு, குடாவெட்டை வயற் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்தவர் சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு நேற்று (04) காலை மாடு மேய்க்கச் சென்றவர், மாலையாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் குடாவெட்டை காட்டுப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 1 =

Back to top button
error: