crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

புத்தளம் நகர சபை புதிய தலைவராக எம்.எஸ்.எம். ரபீக் கடமைகளை பொறுப்பேற்பு

புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எஸ்.எம். ரபீக் அவர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வும், சர்வ மதத் தலைவர்களின் ஆசிர்வாத நிகழ்ச்சியும் இன்று (05) புத்தளம் நகர சபை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், நகர பிதா எம்.எஸ்.எம். ரபீக், உப நகர பிதா சுசந்த புஷ்பகுமார, நகர சபை உறுப்பினர்கள் உட்பட நிர்வாக அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மறைந்த தலைவர் மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் அவர்களை கௌரவிக்கும் வகையில் அதிதிகளாக முன்னாள் நகர பிதா மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் புதல்வி ஷதா பாயிஸ் மற்றும் புதல்வர் பராஜ் பாயிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 18 = 28

Back to top button
error: