crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆக்ரோயா ஆற்றிக்கு அருகாமையில் சிறுத்தை இறந்த நிலையில் மீட்ப்பு

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வௌரலி தோட்டத்திலே அண்மித்த பகுதியில் உள்ள ஆக்ரோயா ஆற்றிக்கு அருகாமையில் உள்ள புற்தரையில் மூன்று அடி நீளமான சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் நேற்று (04) மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் அப்பகுதிக்கு விஜயம் செய்தபோது சிறுத்தை இறந்து கிடப்பதைக் கண்டு பொலிசாருக்கு வழங்கி தகவலையடுத்தே குறித்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் இறந்த சிறுத்தையை மீட்டு நுவரெலியாவிற்கு எடுத்து சென்றுள்ளனர் .

நுவரெலியா வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் மற்றும் அக்கரப்பத்தனை பொலிசார் இணைந்து இறந்த சிறுத்தையை மீட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 23 − 21 =

Back to top button
error: