crossorigin="anonymous">
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி விசேட விமானத்தில் இலங்கை வந்தது

இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி விசேட விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று (28) வந்தடைந்தது.

அதிகாரிகள் மற்றும் வீரர்களை உள்ளடக்கி 47 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணிக்கு ஷீக்கர் தவன் தலைமை தாங்குகின்றார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் 3 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும், 3 ரி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன. இரு அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதனையடுத்து தொடரின் இரண்டாவது போட்டி 15ஆம் திகதியும் மூன்றாவது போட்டி 18 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. ரி 20 போட்டி ஜூலை 21, 23, 25 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 − 48 =

Back to top button
error: