crossorigin="anonymous">
வெளிநாடு

நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் அமைந்துள்ள ஜெரால்டின் நகருக்கு அருகே இன்று காலை 9.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 11 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை சுமார் 14,000 மக்கள் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே மிக வலிமையானது என நியூசிலாந்து நில அதிர்வு கண்காணிப்பு மையமான ஜியோநெட் தெரிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு இதே பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 89 + = 90

Back to top button
error: