crossorigin="anonymous">
விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி பாகிஸ்தானில்

இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கும் முதலாவது போட்டி கண்டி பல்லேகலையில்

ஆசியக் கிண்ண தொடரின் முதலாவது போட்டி இன்று (30) பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் பாகிஸ்தானும்  நேபாளமும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இம்முறை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகின்றது.

தசுன் ஷானக்க தலைமையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை குழாமில் பெத்தும் நிஷங்க, திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, மகேஸ் தீக்ஷன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

சதீர சமரவிக்ரம, துனித் வெல்லாலகே, மதீஷ பத்திரண, கசுன் ராஜித, துஷான் ஹேமந்த, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷங்க ஆகியோரும் ஆசியக் கிண்ண தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்

இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது போட்டி நாளை (31) கண்டி பல்லேகலையில் நடைபெறவுள்ளதுடன் இந்த போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 99 − = 96

Back to top button
error: