crossorigin="anonymous">
Uncategorized

மட்டக்களப்பு மாவட்டத்தில் விஷேட டெங்கு கட்டுப்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் விஷேட டெங்கு கட்டுப்பாடு செயற்பாடுகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தலைமையில் (20) விசேட டெங்கு கட்டுப்பாடு செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அண்மைக்காலமாக டெங்கு நோயாளர்கள் அதிகமாக இணங்காணப்பட்ட பிரதேசங்களான கோட்டைமுனை, வெட்டுக்காடு, கொக்குவில் மற்றும் இருதயபுரம் ஆகிய பிரதேசங்களில் சுகாதார அதிகாரிகள், பொலிசார் மற்றும் மாநரை சபை ஊழியர்கள் உள்ளடங்கிய குழுவினரால் வீடு வீடாக சென்று பரிசோதிக்கப்பட்டது

டெங்கு நுளம்பு உரிவாகும் வண்ணம் பராமரிக்காமல் காணப்பட்ட வீடு மற்றும் வெற்றுக் காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சிகப்பு எச்சரிக்கை ஒட்டப்பட்டதுடன், சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 89 − 79 =

Back to top button
error: