crossorigin="anonymous">
பிராந்தியம்

மகாத்மா காந்தியின் 75 வது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

மகாத்மா காந்தியின் 75 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்

அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று (30) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதுடன், “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடல் பாடி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், மட்டக்களப்பு வர்த்தக சங்க செயலாளர் கே.தியாகராஜா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 1

Back to top button
error: