crossorigin="anonymous">
பிராந்தியம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டத்தின் கீழ் காணப்படுகின்ற சகல பிரதேச செயலகங்களிலும் கடமைபுரிகின்ற முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான முன்னேற்ற அறிக்கை (Progress Report) மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான செயற்திட்டங்கள் (Action Plan ) தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (26 ) இடம்பெற்றது.

மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் அவர்களின் பணிப்புரைக்கமைய சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஏ.சுபைதீன் அவர்களும், அம்பாறை மாவட்டத்தின் கீழ் காணப்படுகின்ற பிரதேச செயலகங்களில் கடமை புரிகின்றன முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 + = 66

Back to top button
error: