crossorigin="anonymous">
வெளிநாடு

ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஈக்வடார், ஜப்பான், மால்டா, மொசாம்பிக், ஸ்விட்சர்லாந்து

ஐ.நா. பாதுகாப்பு சபையின் 10 நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளாக இடம் பெறும் நடைமுறை உள்ளது.

தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும் 5 நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பு நாடுகளாக 5 நாடுகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவற்றில் 2 நாடுகள் முதன்முறையாக இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. பாதுகாப்பு அவையில் உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகளின் பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, இந்த 5 நாடுகளுக்கு மாற்றாக புதிதாக 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக ஐ.நா. பொது அவையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒருமனதாக தேர்வாகின. அவ்வாறு தேர்வான ஈக்வடார், ஜப்பான், மால்டா, மொசாம்பிக், ஸ்விட்சர்லாந்து ஆகிய 5 நாடுகள்  பொறுப்பேற்றுக்கொண்டன.

ஐ.நா பாதுகாப்பு அவையில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + = 9

Back to top button
error: