crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனவரி முதல் வருகை (Arrival Card) அட்டை இணையவழி மூலம்

இலங்கைக்கு வரும் மற்றும் வெளியேறும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு வருகை (Arrival Cards) அட்டையை இணையவழி மூலம் பூர்த்தி செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk அல்லது https://eservices.immigration.gov.lk ஆகியவற்றின் ஊடாக , மூன்று நாட்களுக்குள் இலங்கைக்கு வருவதற்கு அல்லது புறப்படுவதற்குச் செல்வதற்கு முன்னர் இந்த அட்டையை பூர்த்தி செய்ய முடியும்.

இலங்கைக்கு வரும் மற்றும் செல்லும் அனைவரினதும் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 2

Back to top button
error: