crossorigin="anonymous">
பிராந்தியம்

75 வது சுதந்திர தின நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் யாழில்

இலங்கையின் 75 வது சுதந்திர தின நிகழ்வு தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (28) யாழ்மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பஙகுபற்றலுடன் இலங்கையின் 75 வது சுதந்திர தின தேசிய நிகழ்வை ஒட்டிய நிகழ்வுகளை இம் முறை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட இந்திய கலாசார மண்டபத்தில் ஜனவரி மாதம் 11ம் திகதி நடாத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இச் சந்திப்பில் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் புத்தசாசன மத விவகார கலாச்சார அமைச்சின் பணிப்பாளர் ஆகியோர் சூம் தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டதுடன்,ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர்,

யாழ் இந்திய துணைத் தூதுவர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( காணி), யாழ் மாநகர சபை ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதி பொலிஸ்மா அதிபரின் பிரதிநிதி மற்றும் , பிரதேச செயலாளர்கள் ,வடக்கு மாகாணசபை துறைசார் அதிகாரிகள்,வட மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள்,வங்கி பிரதி நிதிகள், மற்றும் துறைசாா் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 − 34 =

Back to top button
error: