crossorigin="anonymous">
பிராந்தியம்

பலாங்கொடை ஜெய்லானி மாணவிகள் வெற்றி

(நதீர் சரீப்தீன்)

இரத்தினபுரி – பலாங்கொடை ஜெய்லானி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இருந்து இம்முறை “அகில இலங்கை மட்டத் தமிழ்மொழித் தின போட்டிகளில்* கலந்து கொண்ட மூன்று மாணவிகளும் வெற்றிவாகை சூடியுள்ளனர்.

இம்மாணவிகளுக்கு அதிபரும் பாடசாலை நிர்வாகமும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகளில்

கட்டுரை ஆக்கப் போட்டியில் (பிரிவு 4) முதலாம் இடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கத்தை மாணவி எம்.ஆர்.எப்.ஹனா பர்வீன் வென்றுள்ளார்.

குறு நாடக ஆக்கப் போட்டியில் (பிரிவு 4) மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை மாணவி எப். நதா வென்றுள்ளார்.

குறு நாடக ஆக்கப் போட்டியில் (பிரிவு 5) நான்காம் இடத்தை மாணவி எப். சைக்கா பெற்றுள்ளார்

இம்மாணவிகளுக்கும்.தமிழ்மொழி போதித்து வழிகாட்டிய ஆசிரியர்கள் அனைவருக்கும் விஷேடமாக துணையாக நின்ற தமிழ்மொழி ஆசிரியர்களான பி . ரமேஷ் ராஜா மற்றும் ரி. விந்துஜா அவர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.ஜே.எம்.மன்ஸூர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 51 − = 45

Back to top button
error: