crossorigin="anonymous">
பிராந்தியம்

மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் பாராட்டி சான்றிதழ்

மத்திய மாகாணத்தில் கொவிட்19 வைரஸ் தொற்று பரவிய காலப்பகுதியில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிககளை வெற்றிகரமாக முன்னெடுத்த மத்திய மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் (05) இடம்பெற்றது.

இதன்போது மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே பிரதம அதிதியாக கலந்துகொண்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கெளரவிதத்தர்

நிகழ்வில் அக்குறணை பிரதேச சபைக்குரிய பாராட்டு சான்றிதழை அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் சார்பாக அக்குறணை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம். சரத் அமரகோன் ஆளுநர் லலித் யூ கமகேயிடமிருந்து பெற்றுக்கொள்வதை படத்தில் காணலாம்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 81 = 91

Back to top button
error: