crossorigin="anonymous">
பிராந்தியம்

மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ.யின் இரத்ததான முகாம்

தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு கண்டி – மடவளை பஸார் வை. எம். எம். ஏ. அமைப்பினால் 16வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம் நாளை 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.00 தொடக்கம் பி,ப 3.00 மணி வரை அமைப்பின் தலைவர் ஏ எல் எம் ரிஷாட் தலைமையில் மடவளை சன்ஷைன் திருமண மண்டபத்தில் நடைபெற்வுள்ளதாக மடவளை பஸார் வை. எம். எம். ஏ. அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.எம். ஹசன் பிராஸ் தெரிவித்தார்

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் இஹ்ஸான் ஹமீத் கலந்து கொள்ளவுள்ளதுடன் அன்றைய தினம் இரத்ததானம் வழங்குபவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன

இரத்ததான முகாமில் பிரதேச மக்கள் அனைவரும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்ய முன்வருமாறு மடவளை பஸார் வை, எம். எம். ஏ. அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.எம். ஹசன் பிராஸ் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 31 = 32

Back to top button
error: