crossorigin="anonymous">
பொது

உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒத்திவைப்பு

2022 க.பொ.த. உயர் தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2022 க.பொ.த உயர்தர பரீட்சை 2023, ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறுதியாக புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதியும் 2022 A/L பரீட்சை டிசம்பர் 05ஆம் திகதி முதல் நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்திருந்த நிலையில், தற்போது இத்திகதிகள் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 66 + = 73

Back to top button
error: