crossorigin="anonymous">
பிராந்தியம்

சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) தம்பலகாமம் பிரதேச செயலக ஏற்பாட்டில் சிறுவர் தின கொண்டாட்டம் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.

“சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்” எனும் தொனிப் பொருளின் கீழ் இம் முறை சிறுவர் தினக் கொண்டாட்டம் இடம் பெற்று வருகிறது

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்ட இவ் வைபவத்தில் சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது.

சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொனரும் முகமாக மூவினங்களை சேர்ந்த சிறார்களின் பல நிகழ்வுகள் இதன் போது அரங்கேற்றப்பட்டன.

உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி பிரிவின் தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள், பெற்றார்கள் சமூக நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: