crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கண்டியில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 37 பசளை மூடைகள் மீட்பு

மத்திய மாகாண நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கண்டி மாவடடத்தில் கலகெதர மற்றும் ஹத்தரலியத்த பிரதேசங்களில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட 37 பசளை மூடைகளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் (12) கைப்பற்றியுள்ளனர்.

மத்திய மாகாண நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஹத்தரலியத்தை நகரத்தில் மேற்படி முற்றுகை மேற்கொள்ளப்பட்டது. சலுகை விலையில் வழங்குவதற்காக வழங்கப்ட்ட மேற்படி பசளை மூடைகளையே அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்துள்ளனர்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 1500 ரூபா பெறுமதியாக ஒரு மூடை பசளை 3000 ரூபாவுக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்தே மேற்படி தேடுதல் இடம்பெற்றுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பசளை மூடைகள் அவ்விடத்திலே விவசாயிகளுக்கு 1500 ரூபாவிற்கு வழங்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 99 − 92 =

Back to top button
error: