crossorigin="anonymous">
பிராந்தியம்

பாலிநகர் வித்தியாலயத்தில் நவீன கற்றல் பிரவேச நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாலிநகர் மகா வித்தியாலயத்தில் நவீன கற்றல் கற்பித்தலுக்கான பிரவேச நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது.

பாலிநகர் மகா வித்தியாலய அதிபர் த.ஸ்ரீ கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற  நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு நிகழ்வினை தொடர்ந்து, நவீன கற்றல் கற்பித்தலுக்கான திறப்பு விழாவும் இடம்பெற்றிருந்தன.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மாகாண கல்வி பணிப்பாளர் செ.உதயகுமார், துணுக்காய் வலயக் கல்வி பணிப்பாளர் மாலதி முகுந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், அயற் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 87 − = 78

Back to top button
error: