crossorigin="anonymous">
விளையாட்டு

OFL கோல்ட் கிண்ணத்தை வாழைச்சேனை நியூ ஸ்டார் சுவீகரிப்பு

ஓட்டமாவடி உதைப்பந்தாட்ட சம்மேளனம் (OFL) நடாத்திய கோல்ட் கப் சுற்றுத் தொடரை வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சுவீகரித்துள்ளது.

பத்து அணிகள் பங்கு பற்றிய உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை (23) ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் வாழைச்சேனை நியூ ஸ்டார் மற்றும் வாழைச்சேனை அல் அக்ஸா ஆகிய அணிகள் மோதிக் கொண்டன.

இதில், 5 – 0 என்ற கோல் கணக்கில் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

ஓட்டமாவடி உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் எஸ்.எம்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற கிண்ணம் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர் கலந்து கொண்டதுடன்,

ஏனைய அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 + = 88

Back to top button
error: