crossorigin="anonymous">
பிராந்தியம்

வாழைச்சேனையில் இடி மின்னல் தாக்கி வீடுகள் சேதம்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் நேற்று (25) பிற்பகல் வேளையில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கம் காரணமாக பிரதேசத்தில் மின்சாரப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளன.

வாழைச்சேனை விநாயகபுரத்தில் பிற்பகல் வேளையில் இரண்டு வீடுகளில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

தென்னை மரங்களில் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டதனால் தீ பற்றியுள்ளது. தீயானது வீட்டின் கூரையின் மீது பரவியதனையடுத்து சம்பவம் அறிந்த அயலவர்கள் தீ பரவாமல் தடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த வீடுளில் வசித்தோர் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றிருந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படமால் தடுக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் பல வீடுகளில் பாவனையில் இருந்த மின்பாவனைப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − 33 =

Back to top button
error: