crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பஸ் வண்டிக்காக காத்து நின்ற மூவர் மீது மரத்தின் கிளை முறிந்து விழுந்து காயம்

ஹட்டன் – காஸல்ரீ நீரேந்து பகுதியில் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக வாகை மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் (13) பஸ் வண்டிக்காக காத்து நின்ற மூவர் காயடைந்துள்ளனர்.

காயடைந்த இருவர் டிக்கோயா ஆதார மருத்துவமனையிலும் ஒருவர் நாவலபிட்டி பொது மருத்துவமனையிலும் சிகிடசைபெற்று வருகின்றனர் என நோர்ட்டன் பிரிட்ஜ் போலீசார் தெரிவித்தனர்.

ஹட்டன்- நோர்ட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் உள்ள காஸல்ரீ நீர்த்தேக்க அணைக்கு அருகிலுள்ள ஒஸ்போர்ன் எஸ்டேட் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளதுடன் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சிக்குண்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 18 − = 16

Back to top button
error: