ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவார் என எதிர்பார்ப்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று 13 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 09 ஆம் திகதி சனிக்கிழமை தெரிவித்திருந்தார் அதனடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி பதவியை இன்று (13) இராஜினாமா செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றன
இலங்கையின் புதிய ஜனாதிபதியை இம்மாதம் எதிர்வரும் 20ஆம் திகதி நியமிப்பதற்கு நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்
கட்சித் தலைவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அரசியலமைப்புக்கு அமைய புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கும் தீர்மானித்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் அடுத்தவார செவ்வாய்க்கிழமையன்று நிறைவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து எதிர்வரும் வாரத்தில் புதன் அல்லது வியாழக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டி வாக்கெடுப்பு நடத்தி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 09 ஆம் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து இலங்கை ஜனாதிபதி மாளிகை, இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பிரதமர் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமளிகை ஆகியவற்றை கைப்பற்றி அங்கு தங்கியிருந்து பதவி விலகுமாறு கோரி தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்