crossorigin="anonymous">
ஆக்கங்கள்

“என் இனிய பட்டாம் பூச்சிக்கு” கவிதை நூல் வெளியீட்டு விழா

பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வுத் தொடரின் 43 வது நிகழ்வாக மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் வி. மைக்கல் கொலினின் “என் இனிய பட்டாம் பூச்சிக்கு” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா இம்மாதம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 3.45 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.றஞ்சிதமூர்த்தியின் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்விற்கு யாழ். மாவட்ட செயலாளர் க. மகேசன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளனர்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாகாண பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந் நிகழ்வில் நூலின் முதற் பிரதியை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

நூல் தொடர்பான நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் ஆற்றவுள்ள துடன், வெளியீட்டுரையை எழுத்தாளர் ச. மணிசேகரனும், வரவேற்புரையை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்க பொருளாளர் கதிரவன் த. இன்பராசாவும், நன்றியுரையை மகுடம் வி.மைக்கல் கொலினும் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 9 = 1

Back to top button
error: