crossorigin="anonymous">
பிராந்தியம்

யாழில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடு கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் நேற்று (21) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி), அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

இக் கலந்துரையாடலில் தற்போது யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பாதிப்படைந்த மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படவுள்ள சேவைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உள்ள தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 18 = 27

Back to top button
error: