crossorigin="anonymous">
வெளிநாடு

தொழிற்சாலையில் துப்பாக்கிச் சூடு, 3 பேர் பலி, பலர் காயம்

அமெரிக்காவின் – மேரிலாண்ட் மாகாணத்தில் ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நபர் ஒருவரால் நேற்று (09)நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகி பலர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 23 வயதான, வெர்ஜினாவை சேர்ந்த இளைஞர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேரிலாண்ட் மாகாண போலீஸார் தரப்பில் கூறும்போது,

“வியாழக்கிழமை மதியம் மேரிலாண்டின் ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

இதில் மூன்று பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 7 =

Back to top button
error: