crossorigin="anonymous">
உள்நாடுபொது

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு  திரிபோஷா இல்லை

இலங்கை முழுவதும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா கையிருப்பில் இல்லை என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது

கடந்த நவம்பர் மாதம் முதல் திரிபோஷாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சோள விளைச்சல் இல்லாமையே திரிபோஷா உற்பத்தி தடைப்படுவதற்கு முக்கிய காரணமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா கையிருப்பில் இல்லை என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 74 − 67 =

Back to top button
error: